கள்ளக்காதலை கண்டித்த மனைவியை விஷ ஊசி போட்டுக் கொல்ல முயன்ற கணவர் கைது – காதலி, நண்பர் தலைமறைவு.!

கோவை: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் ( வயது 27) தனியார் மருத்துவமனையில் கேட்டரிங் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா ( வயது 27) இவர்களது மகன் சாய் சர்வேஷ் (வயது 3) ஸ்ரீதரன் அன்னூர் அருகே மசக்கவுண்டன் செட்டிபாளையம் பக்கம் உள்ள செந்தாம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீதரனுக்கும் அவருடன் வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. இதை மனைவி கீர்த்தனா கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஸ்ரீதரின் மனைவி கீர்த்தனாவுக்கு செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்களது கணவர் ஸ்ரீதரன் தனது கள்ளக்காதலியுடன் சேர்ந்து உங்களை விஷ ஊசி போட்டுக் கொலல முயற்சி செய்கிறார் .உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இது குறித்து கீர்த்தனா தனது கணவருடன் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், கீர்த்தனாவை தாக்கியுள்ளார் .இது தொடர்பாக கீர்த்தனா அன்னூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் .விசாரணையில் கணவர் ஸ்ரீதரன்,கள்ளக்காதலி ரம்யா ,நண்பர் பழனி ஆகிய 3 பேரும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கீர்த்தனாவை விஷ ஊசி போட்டுக் கொல்ல முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கணவர் ஸ்ரீதரனை போலீசார் நேற்று கைது செய்தனர் .மேலும் காதலி ரம்யா, நண்பர் பழனி ஆகியோரை தேடி வருகிறார்கள். கணவரின் கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை விஷ ஊசி போட்டு கொல்ல முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..