மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை.!!

தேனி மாவட்டம் போடி பக்கமுள்ள, சாலி மரத்துப் பட்டியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (.வயது 36) இவரது மனைவி பிரியா என்ற பிரிய தர்சினி ( வயது 22) இவர்கள் வடக்கி பாளையம் பக்கம் உள்ள குள்ளிசெட்டிபாளையத்தில் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்தனர். குடும்பத்தகராறு காரணமாக 7- 11 – 18 அன்று தினேஷ்குமார் தனது மனைவியை கொலை செய்தார். இதுகுறித்து வடக்கிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் தினேஷ் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கணவர் தினேஷ் குமாருக்கு ஆயுள் தண்டனையும் , ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பின்னர் இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்..