ஆபாச படம் பார்க்கிறாயா.. நான் சைபர் கிரைம் போலீஸ் என கூறி கோவை வியாபாரிகளை மிரட்டி பணம் பறித்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.!!

கோவையை சேர்ந்த ஒரு கும்பல் மளிகை கடைக்காரர்களை குறி வைத்து அவர்கள் ஆபாச படங்கள் பார்த்ததாக கூறி அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் வடவள்ளியை சேர்ந்த சபரி (வயது 23) தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் வியாபாரிகளிடம் தங்களை சைபர் கிரைம் போலீஸ் என்று கூறி வியாபாரிகள் ஆபாச படம் பார்த்ததாகவும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யாமல் இருக்க பணம் தர வேண்டும் என்று மிரட்டியது தெரிய வந்தது. உடனே அந்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். இந்த  நிலையில் இந்த கும்பலில் தலைவன் சபரியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார். இதன் பேரில் சபரி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு நேற்று வழங்கப்பட்டது..