ஆட்டோ டிரைவரிடம் அழகிகளை காட்டி பணம் பறித்த கும்பல் கைது – 3 பெண்கள் சிக்கினர்..!

கோவை கணபதி மாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசுதாஸ்பட்டு குமார் துரைராஜ் (வயது 41) ஆட்டோ டிரைவர் .இவர் நேற்று கோவை சரவணம்பட்டி ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இவரிடம் அழகிய பெண்கள் உல்லாசத்திற்கு இருப்பதாக கூறி அழைத்துச் சென்றனர். பின்னர் இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 1000 ரூபாயை பறித்து சென்று விட்டனர் .இது குறித்து ஜேசுதாஸ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் , சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் ஆகியோர் வழக்கு பதிவு செய்து அந்த கும்பலை தேடி வந்தனர் .இதில் தேடப்பட்டு வந்த 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகரைச் சேர்ந்த பாலாஜி ( வயது 50) தேனி மாவட்டம், கம்பம் மலையம்மாள் புரத்தைச் சேர்ந்த முருகன் (வயது 45) திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தும்மல்ல குண்டு பகுதியை சேர்ந்த செல்வகுமார் ( வயது 39) என்பது தெரிய வந்தது . இவர்கள் சரவணம்பட்டி, அன்னை பாத்திமா நகரில் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்த்து வந்தனர்.இந்த கும்பலிடமிருந்த அழகிகளான பெங்களூரை சேர்ந்த அனிதா என்ற அனிமா ( வயது 37 )சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த நந்தினி (வயது 31)தர்மபுரி மாவட்டம் அரூர் சேர்ந்த தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி( வயது 38 )ஆகியோர் கைது செய்யப்பட்டு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இவர்கள் நாடகக் கலைஞர்களுக்கு மேக்கப் போடும் தொழில் செய்து வந்தனர்.