கோவை ஆலயத்தில் ரூ.10 லட்சம் பணம், தங்க காசு திருட்டு – 8 பேர் மீது வழக்கு..!

கோவை ரேஸ் கோர்சில் சி. எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலையம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 10 -ந் தேதி அறுவடை நாள் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் அத்துமீறி உள்ளே புகுந்து பாதிரியார் பிரபு டேனியலிடம் தகராறு செய்தனர் . பிறகு அங்கிருந்த மேஜை நாற்காலியை உடைத்து சேதபடுத்திவிட்டு காணிக்கை செலுத்திய ரூ10 லட்சம் மற்றும் தங்க காசு ஆகியவற்றை திருடி சென்று விட்டார்களாம். இது குறித்து பாதிரியார் பிரபு டேனியல் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். இதன் பேரில் போலீசார் டேவிட் சாலமன், ராபின்சன் சாலமன் பர்ணபாஸ் வசந்தகுமார், பிரபாகரன், நிதா, கிரேஸ், ராஜ சுகுமார் ஜோஸ்வா ஆகியோர் மீது கொலை மிரட்டல், திருட்டு உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.