ஐ.டி. பெண் ஊழியரிடம் செயின் பறிப்பு – வாலிபர் கைது..!

கோவை புது சித்தாபுதூர், வி. கே. கே. மேனன் ரோட்டை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி லதா ( வயது 47) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு இவர் வி.கே.கே மேனன் ரோட்டில் உள்ள பாஜக அலுவலகம் முன் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்து ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து லதா காட்டூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் ,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து புலியகுளம் , சவுரிபாளையம் ரோட்டில் உள்ள பாலசுப்ரமணியம் நகரைச் சேர்ந்த பிரவீன் குமார் என்ற ஆகாஷ் (வயது 24) என்பவரை நேற்று கைது செய்தனர்.இவரிடமிருந்து நகை மீட்கப்பட்டது.