பாகிஸ்தானில் இருந்து போதைப் பொருளுடன் வந்த டிரோன்- சுட்டு வீழ்த்திய வீராங்கனைகள்..!

மிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த டிரோனை எல்லைப்பாதுகாப்பு படை வீராங்கனைகள் சுட்டு வீழ்த்தினர்.

3.11 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சஹர்பூர்கிராமத்தில் நேற்று முன்தினம் எல்லைப்பாதுகாப்பு படையின் பெண் வீரர்கள் குழு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பகல் 11 மணியளவில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து டிரோன் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றது. எல்லையில் கண்காணிப்பு பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படை வீராங்கனைகள் டிரோனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து அந்த பகுதியில் தேடியபோது சேதமடைந்த டிரோன் மீட்கப்பட்டது. இதில், 3.11 கிலோ போதைப்பொருட்கள் இருந்தது. இதனை வீரர்கள் கைப்பற்றினார்கள். தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 25ம் தேதியும் அமிர்தசரஸ் சர்வதேச எல்லைப்பகுதியில் டிரோன் ஒன்றை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.