7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…

7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்…

கோவை மாவட்டத்தில் கடந்த 2022 – ம் ஆண்டு 07 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக செட்டிபாளையம் காவல் நிலையத்தில் ரவிக்குமார்(44) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று ரவிக்குமாருக்கு 07 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூபாய் 7,000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை பெண் காவலர் ஆனந்த செல்வகனி ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பாராட்டினார்.