வாக்கிங் சென்ற கல்லூரி பேராசிரியையிடம் செயின் பறிப்பு – கோவையில் துணிகரம்.!

கோவை ரேஸ் கோர்சில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் செல்வராஜ்.இவரது மனைவி டாக்டர். ராஜகுமாரி( வயது 53 )இவர் கோவை அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார் .இவர் நேற்று இரவு 8 மணி அளவில் ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் ரவுண்டானா பகுதியில் ” வாக்கிங்” சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த ஒரு ஆசாமி திடிரென்று பேராசிரியை கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்தான். உடனே பேரசிரியை தங்கச் சங்கிலியை கெட்டியாக பிடித்தார் .இருந்தாலும் தங்கச்சங்கிலியினில் இருந்த அரை பவுன் டாலர் அருந்து கீழே விழுந்தது. 3 பவுன் தங்கச் சங்கிலிபை பறித்துக் கொண்டு மர்ம ஆசாமி தப்பி ஓடிவிட்டான். இது குறித்து கல்லூரி பேராசிரியை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து வருகிறார்கள்.நகை பறிப்பு சம்பவம் நடந்த இடத்தின் அருகில் தான் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் உள்ளது .