கோவை நீதிமன்றத்தில் தாத்தா, பேரன் மோதல் – போலீசில் புகார்..!

கோவை: மதுரை மாவட்டம். பேரையூர் உத்தமபுரத்தைச் சேர்ந்தவர் அய்யண்ணன் (வயது 83) இவருக்கும் கோவை காந்திபுரம் முதல் வீதியில் வசிக்கும் இவரது பேரன் அழகு மணிக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக சிவில் வழக்கு கோவை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்கு விசாரணைக்காக அய்யனார் நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இதில் பேரன் அழகுமணி அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து அய்ண்ணன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் பேரன் அழகுமணி மீது கொலை மிரட்டல் உட்பட 2 பிரிவுகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில் அவரது பேரன் அழகுமணி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.அதில் தன்னை அவரது தாத்தா அய்யனனும் அவரது மகன் செல்வம் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக தாத்தா அய்யண்ணன், அவரது மகன் செல்வம் ஆகியோர் மீது கொலை மிரட்டல் உட்பட 4பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..