அதிக லாபம் தருவதாக கூறி கோவை பட்டதாரி வாலிபரிடம் ரூ 9 லட்சம் மோசடி..!

கோவை ரத்தினபுரி பி. எம். சாமி காலனி சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் மனோகரன் (வயது 27) பட்டதாரி. இவருக்கு செல்போனில் வாட் அப் மெசேஜ் வந்தது. அதில் ஒரு நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறினார்களாம். இதை நம்பி மனோகரன் பல்வேறு தவணைகளில் ரு.9 லட்சத்து 20 ஆயிரத்து 408 அனுப்பி வைத்தார். பின்னர் அந்த எண்ணுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இது குறித்து மனோகரன் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..