மக்களுடன்_முதல்வர் சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.66-க்குட்பட்ட புலியகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பொதுமக்களுக்கான அரசு துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் அவர்களைச் சென்றுசேரும் வகையில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று,மனுக்களை பதிவு செய்யும் #மக்களுடன்_முதல்வர் சிறப்பு முகாமினை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.முனியம்மாள், திருமதி.ஜெயப்பிரதாதேவி மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.