திருமண வெறுப்பு. வாலிபர் தற்கொலை…

கோவை மதுக்கரை பக்கம் உள்ள குரும்பபாளையம் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடாசலம், இவரது மகன் சதீஷ்குமார் (வயது 32) சி.என்.சி. ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர். சதீஷ்குமாருக்கு திருமணம் செய்ய பிடிக்கவில்லை .இதனால் வாழ்க்கையில்வெறுப்படைந்த சதீஷ்குமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை வெங்கடேசன் மதுக்கரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வைரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.