குடிப்பழக்கத்தை நிறுத்த முடியாததால் பெண் தூக்கு போட்டு தற்கொலை…

கோவை அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம், பூச்சியூர் ரோட்டை சேர்ந்தவர் மோகன், இவரது மனைவி இந்திரா ( வயது 29) குடிப்பழக்கம் உடையவர். குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருந்தாலும் அவரால் குடிப்பழக்கத்தை விட முடியவில்லை. இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த இந்திரா நேற்று அங்குள்ளஒரு தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் லட்சுமி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.