குடிபோதையில்மாடியில் இருந்து தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பலி…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள நெல்லிதுறை என்.எஸ்.ஆர் புரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 52) ஆட்டோ டிரைவர் குடிப்பழக்கம் உடையவர் .இவர் நேற்று குடி போதையில் அவரது வீட்டின் மாடியில் நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார் .அதில் பலத்த காயம் ஏற்பட்டது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் மணி ரத்தினம் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.