பல்லடத்தில் டி.வி. செய்தியாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் மேலும் 4 பேர் கைது..!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேசபிரபு என்பவர் மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . குற்றவாளிகளை பிடிக்க 5 தனிபடைகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய பிரவீன் , சரவணன் ஆகிய 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தேடப்பட்டு வந்த பாலபாரதி ஹரிகரன், ஜெயபிரவீன்,முகமது சபி ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்..