கோவை டாஸ்மாக் பாரில் பயங்கரம்… வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கி கொல்ல முயற்சி -10 பேர் மீது வழக்குபதிவு..!

கோவை ரத்தினபுரி அண்ணா நகரை சேர்ந்தவர் ரியாஸ் அகமது ( வயது 22 )கார் பாலிஷ் வேலை செய்து வருகிறார். நேற்று இவர் கண்ணப்பன் நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தனது நண்பர் கருப்புசாமியுடன் மது அருந்த சென்றார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தீபகணேஷ், நெய் அஜித் மற்றும் சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்களுக்குள் முன் விரோதம் காரணமாக வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தீப கணேஷ், நெய் அஜித் மற்றும் சிலர் சேர்ந்து ரியாஸ் அகமதுவை இரும்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் .இதில் ரியாஸ் அகமது படுகாயம் அடைந்தார் .சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தீபகணேஷ் , நெய் அஜீத் உட்பட 10 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல் ,உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.