வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன், பைக் வழிப்பறி – 3 பேர் கைது..!

கோவை மாவட்டம் சோமனூர் ராமச்சியம்பாளையம் பகுதியில் வசிப்பவர். சுரேந்திரா (வயது 23) ஒடிசாவை சேர்ந்தவர்.இவர் நண்பர்களுடன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவாரூரைச் சேர்ந்த ஆகாஷ்(23), விருதுநகரைச் சேர்ந்த தமிழ்வாணன் (32) மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த குணசேகர் (வயது 29) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்து கத்தியை காட்டி மிரட்டி இவர்களிடமிருந்த செல்போன்களை பறித்தனர்.

இதையடுத்து சோமனூர் கடைவீதி அருகே சூலூர் செந்தேவி பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பைக்கை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றிருந்தார். அப்போது 3 பேரும் சேர்ந்து அந்த பைக்கையும் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்ட 3 நபர்களை சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து எதிரிகளை கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.