ஆசிரியை வீட்டில் 12 பவுன் நகை திருட்டு – மர்ம நபருக்கு வலை..!

கோவை வடவள்ளி அருகே உள்ள சுண்டப்பாளையம் ஹரி ஸ்ரீ கார்டனை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 42) இவர் வடவள்ளியில் உள்ள மருதமலை தேவஸ்தான மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் அன்பு சிவா .இவர் சென்னையில் தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர்களது மகன் சர்வேஷ் .இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பாக்கியலட்சுமி தனது மகனை பள்ளிக்கு அனுப்பி விட்டு அவரும் வேலைக்கு சென்றார் .பின்னர் பாக்கியலட்சுமி மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 12 பவுன் நகைகள் காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ4 லட்சத்து 50 ஆயிரம் இருக்கும். இதுகுறித்து பாக்கியலட்சுமி வடவள்ளி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார் .இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்