தாம்பரத்தில் பயங்கரம்…. பிரபல ரவுடி வெட்டி படுகொலை.!!

தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் காலி மைதானத்தில் மர்ம ஆசாமி கண்டந் துண்டமாக வெட்டுப்பட்ட நிலையில் ஒரு மர்ம ஆசாமி பிணமாக கிடப்பதாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் க்கு செல்போனில் தகவல் கொடுத்தனர் . அதன் பேரில் பீர்க்கன்கரணை போலீசாருக்கு மைக்கில் தகவல் கொடுத்தார்.  அங்கு சென்ற போலீசார் பிணத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் துறை நிபுணர்களும் கைரேகை நிபுணர்களும் பிணத்தை ஆய்வு செய்தனர். பிணம் கிடந்த இடத்தை மோப்ப நாய் கொஞ்சம் தூரம் ஓடி மோப்பம் பிடித்தது. ஆனால் குற்றவாளிகளை அது பிடிக்க முடியவில்லை. போலீஸ் தனிப்படையினர் தீவிரமாக விசாரணையில் கொலை செய்யப்பட்ட நபர் பழைய பெருங்களத்தூர் காமராஜர் தெருவை சேர்ந்த பிரி வெங்கடேசன் வயது 33 .இவன்  இப் பகுதியில் ரவுடியாக வலம் வந்துள்ளான். 2015 அன்று நடந்த கொலையிலும் மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவன் திருந்தி வாழ விரும்பி பாஜகவில் சேர்ந்து பெருங்களத்தூர் முடிச்சூர் மண்டல பட்டியல் அணி தலைவராக இருந்து வந்துள்ளார். இவரது எதிரிகள் சமீபத்தில் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. நண்பர்களாக இருந்தவர்களுடன் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்திருக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது . மேலும் இப்பகுதியில் உள்ள சி சி டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் மர்ம கும்பல் காரில் கடத்தி வந்து நள்ளிரவு நேரத்தில் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை செய்து விட்டு ரத்தத்தை நாக்கில் ருசித்து விட்டு தப்பி சென்றுள்ளனர் தப்பி ஓடிய கொலையாளிகள் கடலூர் மாவட்டம் அருகே காரை நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது