கோவை பியூட்டி பார்லரில் பயங்கர தீ விபத்து – ரூ.3 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்..!

கோவை ரேஸ் கோர்சில் உள்ள ஒரு காம்ப்ளக்சில் ” ஸ்பா. அழகு நிலையம் உள்ளது.பூட்டி இருந்த அழகு நிலையத்திலிருந்து நள்ளிரவில் புகை வந்தது. இதை காவலாளிகள் ராமலிங்கம் ராஜகோபால் ஆகியோர் பார்த்து மேனேஜருக்கு தகவல் கொடுத்தனர்.இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அழகு நிலையத்தில் உள்ள ஏராளமான மேஜை, நாற்காலி, அழகு சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. சேதமதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் அதன் உரிமையாளர் ரமேஷ் ( வயது 52 ) புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..