குடிபோதையில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது..!

கோவை சக்தி நகரை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 52).இவரது மனைவி கவுரி ( வயது 48) இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். செந்தில்நாதன் குடிப்பழக்கம் உடையவர்.இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இந்த நிலையில் மனைவி கவுரி கோபித்துக் கொண்டு பீளமேடு எல்லைத் தோட்டத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.நேற்று குடிபோதையில் அங்கு சென்ற செந்தில்நாதன் மனைவி கவுரியிடம் தகராறு செய்து கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பீளமேடு போலீசில் கவுரி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் செந்தில் நாதனை கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது..