கோவையில் கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை..

கோவை அன்னூர் செல்லப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 23). எலக்ட்ரீசியன். இவருக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதன் பின்னர் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று அருண்குமார் வீட்டில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். அப்போது விரக்தி அடைந்த அவர் செல்லப்பம்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.