கி.வீரமணிக்கு ‘தகைசால் தமிழர்’ விருது : ரூ.10 லட்சம் காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்..!

சென்னை: 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருதினை வழங்கவுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரிலான விருது கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது கி.வீரமணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.