திடீர் திருப்பம்… கோவை வியாபாரி வீட்டில் பட்டபகலில் புகுந்து 37 பவுன் நகைகள், ரூ 9 லட்சம் பணம் முகமூடி கொள்ளை சம்பவத்தில் சேலம் போலீஸ்காரரிடம் துருவி, துருவி விசாரணை.!!

கோவை ஆர் .எஸ் . புரம், ஆரோக்கியசாமி ரோடு (மேற்கு) பகுதியை சேர்ந்தவர் கமலேஷ் மோடி (வயது 50) பருத்தி வியாபாரி. இவர் ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பருத்தி வாங்கி கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி ரூபல் (வயது 45) இவர்களின் மகன் மிகிர் ( வயது 22) மிகிர் படித்து முடித்துவிட்டு தந்தையின் வியாபாரத்திற்கு துணையாக இருந்து வருகிறார். தைப்பூசம் என்பதால் மருதமலை கோவிலில் பக்தர்களுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்குவதற்காக கமலேஷ் மோடி சென்றிருந்தார்.
இதனால் வீட்டில் மனைவி ரூபன் மகன் மகிர் வீட்டில் வேலை செய்யும் ஊழியர்கள் இருந்துள்ளனர். மதியம் 1 மணி அளவில் கமலேஷ் மோடி வீட்டுக்கு 2 கார்கள் ஒரு மோட்டார் சைக்கிள் மொத்தம் 12 பேர் முகமூடி அணிந்து வந்தனர் .அவர்கள் அந்த பங்களாக்குள் புகுந்தனர். வீட்டின் கீழே பருத்தி அலுவலக அறை உள்ளது அங்கு மகன் மிகு மற்றும் ஊழியர்கள் இருந்தனர் இதனால் கொள்ளையர்கள் 5 பேர் கீழே நின்று கொண்டனர் . 5 பேர் பங்களா வீட்டின் மாடிக்கு சென்றன இதை பார்த்து மிகிர் அதிர்ச்சி அடைந்தார். அவர் சுதாரிப்பதற்குள் கீழ்த்தளத்துக்கு சென்று 5 பேரும் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி மிகிர் உட்பட 4 பேரையும் கயிறு மற்றும் திரைச்சீலையை கழித்து கட்டி போட்டனர் .பின்னர் அலுவலகத்தில் இருந்த ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்தனர். இதற்கிடையே மாடிக்குச் சென்ற கொள்ளை பர்கள் பருத்தி வியாபாரி கமலேஷ் மோடியின் மனைவி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்கள். மேலும் அந்த வீட்டிலிருந்த வேலைக்காரர்கள் உட்பட 4 பேரின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினார்கள் .மேலும் அவர்கள் கூச்சல் போடாமல் இருக்க வாயில் துணியை திணித்தனர் .இதை யடுத்து கொள்ளையர்கள் வீட்டு பீரோவின் சாவி தருமாறு கேட்டு ரூபாய் மிரட்டினர். இதனால் பயந்து போன ரூபல் பீரோ சாவியை கொடுத்தார் உடனே பீரோவில் இருந்த தங்க -வைர நகைகள்உள்பட 37 பவுன் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர். அதோடு வீட்டில் இருந்தவர்கள் வைத்திருந்த செல்போன்களையும் பறித்துவிட்டு கார்களில் ஏறி மின்னல்வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர் கொள்ளையர்கள் சென்றதும் கைகால்களை கட்டி இருந்த கயிறுகளை அவிழ்த்துவிட்டு மிகில், ரூபன் மற்றும் ஊழியர்கள் வெளியே வந்தனர். அவர்கள் கொள்ளை நடந்தது குறித்து கூச்சல் போட்டனர் .வீட்டில் கொள்ளை நடந்தது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவத்திற்கு விரைந்தனர்.துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார், உதவி கமிஷனர் ரவிக்குமார் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பங்களாவில் கொள்ளை அடித்த ஆசாமிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 4 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டில் கமலேஷ் மோடி இல்லாததை அறிந்து திட்டமிட்டு கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக தெரிகிறது . கத்தியை காட்டி மிரட்டியதால் உயிருக்கு பயந்து கொள்ளையர்களிடம் நகை பணத்தை கொடுத்ததாகவும் கூறினார்கள் .கொள்ளையர்கள் தமிழில் பேசியதாகவும் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகமூடி அணிந்து வந்ததாகவும் தெரிகிறது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- வியாபாரி கமலேஷ் மோடி வீட்டில் இருந்த 8 பேரை கட்டிப்போட்டு நகை பணத்தை கொள்ளையடித்த நபர்களுக்கு ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் திருப்பூர் மற்றும் சேலத்தில் இதுபோன்று நடைபெற்ற கொள்ளை சம்பவ வழக்குகளின் விவரங்களை சேகரித்து வருகிறோம். அதில் தொடர்புடைய நபர்களையும் விசாரித்து வருகிறோம். இதற்கிடையே கமலேஷ் மோடி வீட்டில் கொள்ளை அடித்த கும்பல் கேரளாவுக்கு தப்பி சென்றதாக தெரிகிறது. இதன் காரணமாக ஒரு தனிப்படை கேரளா விரைந்து உள்ளது. அங்கு குற்ற சம்பவங்களின் தொடர்புடைய ஹவாலா கும்பல் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர்.கொள்ளையர்களைப் பற்றிய முக்கிய தடையம் சிக்கி உள்ளது. இந்த நிலையில் சேலத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வரும் ஒருவருக்கு இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் கோவைக்கு அழைத்து வந்து துருவி, துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள்.விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்..