திருச்சி நாம் தமிழர் நிர்வாகி வீட்டில் என் ஐ ஏ அதிரடி சோதனை.!!

திருச்சி சென்னை நெல்லை மதுரை சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர் . இதன் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீட்டில் திருச்சியில் அதிரடி சோனை நடந்து கொண்டிருக்கிறது. 50க்கும் மேற்பட்ட தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் ஊடுருவல் செய்தனரா என்ற சந்தேகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட எல்டிடி அமைப்பினரோடு தொடர்பில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
திருச்சி, கோவையில் நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சி வயலூர் சாலை சண்முகா நகரில் உள்ள வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவது தொடர்பாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என் ஐ ஏ சோதனை நடத்தியது அந்த கட்சிக்குள் Orders அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.