சட்டத்துக்கு புறம்பாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-கோவை மேற்கு மண்டல புதிய போலீஸ் ஐ.ஜி.பவானீஸ்வரி பேட்டி.!!

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் சுதாகர், இவர் சென்னை பெருநகர் போக்குவரத்து இணை கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை இணை கமிஷனராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார் . அவர் நேற்று மாலை கோவை ரேஸ் கோர்சில் உள்ள அவரது அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜியாக பொறுப்பேற்றுக் கொண்டார் . அவரை மேற்கு மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் ஐ.ஜி. பவானீஸ்வரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:. -கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள அதிகாரிகள் சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்கள். பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக போதை பொருட்கள் எங்கிருந்து வருகிறது? என்பதை கண்டறிந்து அவை விற்கப்படுவது தடுக்கப்படும் .இது தொடர்பாக பள்ளி கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் .மேற்கு மண்டலம் கேரளா மற்றும் கர்நாடக எல்லையில் உள்ளதால் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணித்து தடுத்து நிறுத்துவதுடன் சோதனை சாவடிகள் வலுப்படுத்தப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரபடுத்தப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவை தடுத்து நிறுத்தப்படும். மேலும் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும் முக்கியத்துவம் அளிக்கப்படும். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .முக்கியமாக சாலை விபத்துக்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இவ்வாறு அவர் கூறினார். இவர் 2002அண்டு ஐ.பி. எஸ் பட்டம் பெற்றார். பின்னர் சி.பி.சி.ஐ.டி பிரிவு கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கியூ பிராஞ்ச் ஆகியவற்றில் போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை கீழ்பாக்கத்தில் துணை போலீஸ் கமிஷனராகவும் மெட்ரோவில் பாதுகாப்பு அதிகாரியாகவும், சென்னையில் போக்குவரத்து இணை கமிஷனராகவும், பின்னர் திருச்சி சரக டி.ஐ.ஜியாக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்று லஞ்ச ஒழிப்பு துறையில் ஐ.ஜியாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது…