கோவை டாக்டர் திடீர் மாயம் – போலீசில் புகார்..!

கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள ரங்கசாமி காலனியை சேர்ந்தவர் திருமூர்த்தி ( வயது 72 )இவர் வீட்டில் ஹோமியோபதி மருத்துவமனை நடத்தி வருகிறார் .கடந்த 16ஆம் தேதி டீ சாப்பிட்டு வருவதாக வெளியே சென்றவர் மீண்டும் கிளினிக் திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது .அவர் எங்கு சென்றார் ?என்று தெரியவில்லை .இது குறித்து அவரது மகன் சுரேஷ் செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.