ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நகை,பணம் திருட்டு-மர்ம ஆசாமிகள் துணிகரம் ..!

கோவை துடியலூர் பக்கம் உள்ள தொப்பம்பட்டியைப சேர்ந்தவர் முப்பிடாதி(வயது 64)இவர் தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவதன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்குசென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போதுஅவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டுஉடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகள் ரூ 10 ஆயிரம் பணம் ஆகியவற்றை காணவில்லை, யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.