மதுபிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…டாஸ்மாக் கடைகள் 2 நாட்களுக்கு தொடர் விடுமுறை.!!

நாளை முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள், எலைட் பார்களை 2 நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை ஜனவரி 25ம் தேதி தைப்பூச திருநாள், நாளை மறுநாள் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா ஆகிய 2 தினங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தினங்களில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், கிளப் மற்றும் பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை ஜனவரி 25ம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டும், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும் இந்த 2 தினங்களிலும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல் 1) மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதைச் சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல் பார்கள் மற்றும் எப்எல் 3ஏ, ஏஏ,மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் இந்த 2 நாட்களில் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு நாட்களும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.