காங்கிரஸ் கட்சியினரிடம் ஆதரவு திரட்ட இன்று தமிழகம் வருகிறார் சசி தரூர்..!

கில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வரும் 17 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு சேகரிக்க இன்று சென்னை வருகிறார் சசி தரூர்.

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர்கள் மல்லிகா அர்ஜுனா கார்க்கே, சசிதரூர் மற்றும் கே. என் .திரிபாதி மனுத் தாக்கல் செய்தனர்.
இதில் திரிபாதி மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சசிதரூர் மற்றும் மல்லிகா அர்ஜுனா இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இதனால் தேர்தலில் வெற்றிபெறக் கட்சியினரின் ஆதரவு தேவைப்படுவதால் தமிழக காங்கிரஸ் கட்சியினர்யிடம் ஆதரவு திரட்ட சசி தரூர் இன்று சென்னை வரவுள்ளார். மேலும் மாலை3 மணிக்குக் கிண்டியில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கும், தொடர்ந்து காமராஜர் சிலைக்கும் மரியாதை செய்கிறார். பின்னர் சென்னை ஐஐடியில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

தமிழக காங்கிரஸ் தலைமையிடமான சத்திய மூர்த்திபவனுக்கு ஆதரவு திரட்ட செல்கிறார். சசி தரூருக்கு ஆதரவு அளிப்பதாக ப சிதம்பரம் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். மற்றவர்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும் என்ற நோக்கில் சசி தரூர் இன்று தமிழகம் வருகிறார். இவரைத் தொடர்ந்து , 13 ஆம் தேதி மல்லிகா அர்ஜுனாவும் ஆதரவு திரட்ட தமிழகம் வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.