வேலை பார்த்த வீட்டிலேயே நகை திருடிய வேலைக்கார பெண் கைது..!

கோவை ராமநாதபுரம், கிருஷ்ணசாமி ரோட்டை சேர்ந்தவர் ஸ்டீபன் செய். இவரது மனைவி பான்சி மேரி (வயது 36) இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .கடந்த மாதம் 10 – 7 – 20 22அன்று வீட்டை பூட்டிவிட்டு விழுப்புரம் சென்று விட்டார். கடந்த 16-ந்தேதி திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 2பவுன் எடை கொண்ட 3 மோதிரம், பணம் ரூ. 84 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. இதுகுறித்து பான்சி மேரி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் வீட்டில் 7 மாதங்களாக வேலை செய்து வந்த ராமநாதபுரம் மருதூரைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி கவிதா ( வயது 45 ) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து நகை மீட்கப்பட்டது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.