கந்து வட்டி சம்பந்தமாக 41 இடங்களில் சோதனை:  புகாரின் அடிப்படையில் சோதனை தொடரும் – மாவட்ட காவல் ஆணையாளர்

கந்து வட்டி சம்பந்தமாக 41 இடங்களில் சோதனை:  புகாரின் அடிப்படையில் சோதனை தொடரும் – மாவட்ட காவல் ஆணையாளர். 

கோவை மாவட்டத்தில் நேற்று கட்டிவட்டி புகார் வழக்கில் ஒரே நாளில் 19 பேரை கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், நேற்று 41 இடங்களில் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் 19 FIR கள் பதியப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கபட்டுள்ள்தாக தெரிவித்தார். நேற்று நடந்த இந்த சோதனையில் 1.26 கோடி பணம், 379 நில சம்பந்தமான ஆவணங்கள், 127 செக் லீப், 48 ATM கார்டுகள், 18 பேங்க் பாஸ் புக், 54 வெற்று கையெழுத்து காகிதங்கள், 211 ஆர்சி புத்தகங்கள், 230 அகவுட்ண் புத்தகங்கள், 3 பாஸ்போர்ட்கள், 7 ஆதார் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். பொதுமக்கள் யாருக்கேனும் இது போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் 3 கந்துவட்டி வழக்குகளில் 2 பேரை கைது செய்துள்ளதாகவும் இந்த நடவடிக்கைகள் மற்றும் சோதனைகள் டிஜிபி ஆணைக்கிணங்க மேலும் தொடரும் எனவும் தெரிவித்தார். மேலும் Finance யிலேயே கந்துவட்டியும் மேற்கொண்டால் அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.