கோவையில் போதை ஊசி கும்பல் கைது: கார்,பைக், 85 போதை மாத்திரைகள் பறிமுதல்..!

கோவை உக்கடம் காந்திநகர் பண்ணாரி அம்மன் கோவில் அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் ரவிக்குமார் மேற்பார்வையில், கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா, சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது ஒரு காரிலும், இருசக்கர வாகனத்திலும் மறைத்து வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வேலாண்டிபாளையம் கணேஷ் பாபு (வயது 24) ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் சரவணன் ( வயது 31) இடையர்பாளையம் கணேஷ் குமார் (வயது 21) திருச்சி ரோடு ,ஹைவேஸ் காலனி சேர்ந்த ஜான் ஜோசப் ( வயது 31)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குனியமுத்தூரை சேர்ந்த மணி சேகர் ‘சித்தாபுதூர் அரிபுரம் கண்ணன் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். இந்தக் கும்பலிடமிருந்து 85 போதை மாத்திரைகள் 4 செல்போன், ஒரு பைக், ஒரு கார் ஒரு சிரஞ்சீ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.