திருச்சி வியாபாரியிடம் பழைய கார்களை புதுப்பித்து தருவதாக ரூ.50 லட்சம் மோசடி..!

கோவை : திருச்சியை சேர்ந்தவர் வெங்கடேஷ் துரை ( வயது) 50 இவர் பழைய கார்களை வாங்கி உரிய முறையில் பழுது பார்த்து, புதுப்பித்து, விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மேலும் கார்களை பழுது நீக்க வெளி நபர்களிடம் வழங்குவது வழக்கம். அதன்படி வெங்கடேஷ் துரை 7 காரர்களை புதுப்பிக்க கோவை, சாய்பாபா காலனி ,ரமணாலே அவுட் . பாரதியார் ரோட்டை சேர்ந்த சத்திய கீதன்,கணேஷ் முத்தையா ஆகியோரிடம் கொடுத்திருந்தார். அவர்கள் பழைய கார்களுக்கு பொருத்த உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு ரூ.50 லட்சம் கேட்டுள்ளனர். அந்த பணத்தை வெங்கடேஷ் துரை கொடுத்துள்ளார். ஆனால் உதிரிபாகங்கள் வாங்காமலும், கார்களை புதுப்பித்து தராமலும் சத்திய கீதன் கணேஷ் முத்தையா ஆகியோர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.