நள்ளிரவில் கல்லூரி மாணவர்களிடம் கத்தியை காட்டி பணம் செல்ஃபோன் பறிப்பு- தலைமறைவாக இருந்த கொள்ளையன் கைது..!

கோவை புளியகுளம் பெரியார் நகர் பகுதியில் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வீடு எடுத்து தங்கி படித்து வருகின்றனர் . இந்த நிலையில் இவர்களது வீட்டிற்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் கதவை  தட்டி தங்கிய கல்லூரி மாணவர்களை அழைத்தனர். மாணவர்கள் கதவை திறந்தவுடன், கதவுக்கு வெளியில் காத்து இருந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி வீட்டுக்குள் உள்ளே சென்றனர்.

அப்போது அங்கு இருந்த இரண்டு கல்லூரி மாணவர்களை கத்தியில் கீழித்து காயப்படுத்தி விட்டு ஐந்து செல்போன்கள், 500 ரூபாய் பணத்தை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் மொபைல் டிராக்கிங் மூலமாக கண்காணித்தனர். இதை தொடர்ந்து புகார் தரப்பட்ட ஒரு மணி நேரத்தில் துரித நடவடிக்கை மேற்கொண்ட காவல் துறையினர் ஜெயராஜ் என்ற கொள்ளையனை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வந்த நிலையில் தலைமறைவாக இருந்த கொள்ளையன் விக்னேஷ்வரன் கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள மற்றொரு கொள்ளையனை தேடி வருகின்றனர் .