சூலூரில் மார்பிள் கடையில் ரூ.5 லட்சம் கையாடல் – மானேஜர் கைது..!

கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் மனோஜ் நகரை சேர்ந்தவர் பிரதீப் ராஜா சௌகன் ( வயது 47) இவர் சிந்தாமணிபுதூரில் மார்பிள் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார் . இவரது கடையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாதவ் லால் ( வயது 33) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக மேனேஜராக வேலை பார்த்து வந்தார். கடை உரிமையாளர் பிரதீப் ராஜா சொந்த ஊருக்கு சென்றிருந்தார். அப்போது கடையில் உள்ள பணம் ரூ 5 லட்சத்து 67 ஆயிரத்தை கையாடல் செய்து விட்டு மாதவ் லால் தப்பி ஓடிவிட்டார் .இது குறித்து பிரதீப் ராஜா சவுகான் சூலூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்கு பதிவு செய்து மானேஜர் மாதவ் லாலை நேற்று கைது செய்தார்.