மேஸ்திரியிடம் கத்தி முனையில் வழிப்பறி – கொள்ளையன் கைது..!

கோவை துடியலூர் பக்கம் உள்ள தொப்பம்பட்டி, கோத்தாரி நகரை சேர்ந்தவர் வேணு ( வயது 41) கட்டிட தொழிலாளி .இவர் நேற்று வெள்ளக் கிணறு – உருமாண்டம்பாளையம் ரோட்டில் தனது நண்பருடன் நடந்து சென்றார் .அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரை கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து வேணு துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்கு பதிவு செய்து நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்தம் (வயது 25) என்பவரை நேற்று கைது செய்தார். இவரிடம் இருந்து நகை மீட்கப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.