கோவை நகை வியாபாரியிடம் ரூ.31 லட்சம் மோசடி – அண்ணன், தம்பிக்கு போலீசார் வலைவீச்சு.!!

கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 50) தங்க மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த செந்தில் முருகன் ( வயது 42) அவரது தம்பி ராஜி ஆகியோர் அறிமுகமானார்கள். . வங்கியில் ஏலம் விடக் கூடிய நகைகளை பெற்று தருவதாக கூறி சுரேசிடம் ரூ. 31 லட்சம் வாங்கினார்களாம். இதுவரை எந்த நகையும் கொடுக்கவில்லை. வாங்கிய ரூ.31 லட்சம் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர் . இதுகுறித்து சுரேஷ் வெரட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் செந்தில் முருகன் அவரது தம்பி ராஜி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.