நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு..!

கோவை, பீளமேடு, வி .கே. ரோடு , டீச்சர்ஸ் காலனி சேர்ந்தவர் கிறிஸ்டோபர் இவரது மனைவி ரெக்ஸ்லின் ( வயது 32) நேற்று இவர் அங்குள்ள நேதாஜி ரோடு குழந்தைகள் பூங்கா அருகே சைக்கிள் ஓட்டிச் சென்ற தனது மகனுக்கு பின்னால் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு ஆசாமி ரெக்ஸின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டான். இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.