வெளிநாடு சென்றவர் வீட்டில் நகை -பணம் கொள்ளை..!

வெளிநாடு சென்றவர் வீட்டில் நகை -பணம் கொள்ளை..!   கோவை பீளமேடு புராணி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கூசப்பா.இவர் கடந்த 18ஆம் தேதி முகரம் பண்டிகையாக துபாய் சென்று விட்டார்.நேற்று இவரது அண்ணன் முத்து ஷாவின் மகள் அவரது வீட்டை சுத்தம் செய்ய சென்றார். அப்போது வீட்டின் பீரோ உடைக்கபட்டு கிடந்தது. அதிலிருந்த 10 பவுன் நகைகள் பணம் ரூ.50 ஆயிரம் .5 கைக்கடிகாரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ பூட்டை உடைத்து திருடி சென்று விட்டனர் . இது குறித்து பூசப்பாவின் அண்ணன் முத்துஷா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.