கோவையில் மொபட் மீது ஆட்டோவை மோத விட்டு பெண்ணிடம் பணம் கொள்ளை..! 

கோவையில் மொபட் மீது ஆட்டோவை மோத விட்டு பெண்ணிடம் பணம் கொள்ளை..!  கோவை உப்பிலிபாளையம் ஜோதி நகரை சேர்ந்தவர் பால்ராஜ் இவரது மனைவி புஷ்பா (வயது 47) இவர் தனது மகளுடன் மொபட்டில் அங்குள்ள பேக்கரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து ஆட்டோவில் 4 பேர் வந்தனர் .அந்த ஆட்டோ திடீரென்று அவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் புஷ்பாவும் அவரது மகளும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். உடனே ஆட்டோவில் இருந்த 4 பேரில் ஒருவர் மட்டும்கீழே இறங்கி வந்து புஷ்பாவின் கைப்பை பறித்துவிட்டு ஆட்டோவில் ஏறி தப்பி சென்றனர் .அந்த பையில் ரூ 500 மட்டும் இருந்ததால் பணத்தை எடுத்துவிட்டு பையை தூக்கி வீசிவிட்டு அவர்கள் சென்றனர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புஷ்பா புகார் செய்தார் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாக்கிங் சென்ற பெண்னிடம் காரில் சென்று செயின் கொள்ளடிக்கப்பட்ட சம்பவம் நடந்தது. குறிப்பிடத்தக்கது.