சினிமா தியேட்டர் ஊழியரை தாக்கிய அஜித் ரசிகர்கள் 2 பேர் கைது..!

கோவை கவுண்டம்பாளையம் சாமுண்டீஸ்வரர் நகரை சேர்ந்தவர் அசோகன் (வயது 50 )இவர் கோவை ஆர் .எஸ். புரம். பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் கார் பார்க்கிங் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று குடிபோதையில் படம் பார்க்க வந்த 2பேர் அசோகனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கணபதி காமராஜர் புரத்தைச் சேர்ந்த தீபக் குமார் (வயது 29) ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த நாகேந்திரன் ( வயது 20) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் அஜித் ரசிகர்கள் ஆவார்கள். பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.