சசிகலாவிடம் தொடர்ந்து 2வது நாளாக விசாரணை: 100க்கும் மேற்பட்ட கேள்விகள் தனிப்படை போலீசார் கேட்டதாக தகவல்.!!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வரும் நிலையில் நேற்று சசிகலாவிடம் விசாரணை செய்யப்பட்டது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இன்று 2வது நாளாகவும் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

அவரிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் தனிப்படை போலீசார் கேட்டதாகவும் அனைத்து கேள்விகளுக்கும் சசிகலா பதில் கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இந்த நிலையில் இன்றைய விசாரணை முடிந்தவுடன் சசிகலா செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் விசாரணை குறித்த தகவல்களை அவர் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது