நகைக்கடை, பூச்சி மருந்து கடையில் கொள்ளை முயற்சி – ஒருவர் கைது..!

கோவையை அடுத்த ஆலந்துறை அருகில் உள்ள போளுவாம்பட்டியில் பூச்சி மருந்து மற்றும் உரக்கடை நடத்தி வருபவர் பால்பாண்டி (வயது 47) நேற்று இரவு இவரது கடையில் ஷட்டர் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.  இதே போல அதே பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இது குறித்து உரக்கடை உரிமையாளர் பால்பாண்டி ஆலந்துறை போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து( வயது 42) என்பவரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்..