குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மனைவி கற்பழிப்பு – கணவர் அவரது நண்பர் கைது.!!

கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம், வேலாந்தவளம் ரோட்டை சேர்ந்தவர்.32 வயது பெண் இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார்..அப்போது அந்தப் பெண்ணின் கணவரான ஆதிநாராயணன் ( வயது 34) அவரது நண்பரான கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 37) ஆகியோர் குடிபோதையில் அவரது வீட்டில் புகுந்தனர். குளிர்பானத்தில் மதுகலந்து கொடுத்து அவரை கட்டாயப்படுத்தி வாயில் ஊற்றினார்களாம். அதை அவர் தட்டி விட்டு படுக்கை அறைக்குள் சென்று விட்டார்..அந்த நேரத்தில் ஆதிநாராயணன் அவரை பின்தொடர்ந்து சென்று படுக்கை அறையில் இருந்து வராண்டாவுக்கு இழுத்து வந்து நண்பர் கார்த்திகேயனிடம் உடலுறவு கொள்ள கட்டாயப்படுத்தினாராம். அதற்கு அந்த பெண் மறுத்ததால் ஆதிநாராயணனிடம் கள்ள தொடர்பு இருப்பதாக கூறி அசிங்கப்படுத்துவதாக மிரட்டினார். பின்னர் மனைவியிடம் கட்டாயமாக உடலுறவு கொள்ள வைத்தாராம்..இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.இது குறித்து அந்த பெண் செட்டிபாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் ஆதிநாராயணன் (வயது 34) நண்பர் கார்த்திகேயன் (வயது 37 ) ஆகியோரை கைது செய்தனர். இவர்களில் ஆதிநாராயணன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார் .கார்த்திகேயன் காந்திபுரத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்க்கிறார் .இவர்கள் மீது கற்பழிப்பு கொலை மிரட்டல் ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..