பைக்கில் கஞ்சா கடத்தல் – வாலிபர் கைது..!

கோவை :கருமத்தம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் நேற்று அங்குள்ள ராம செட்டிபாளையம், ரயில்வே பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம் 1,100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சேர்ந்த வெங்கடேஸ்வரன் (வயது 31 ) என்பது தெரிய வந்தது. இவர் சோமனூர் பக்கம் உள்ள கரவழி மாதப்பூரில் தங்கி இருந்து மில்லில் கூலி வேலை செய்து வருகிறார். இவருடன் இருந்த பைக்கும், கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.