கோவை தனியார் பல் மருத்துவமனையில் திருட்டு..!

கோவை சாய்பாபா காலனி என்.எஸ். ஆர் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பல் மருத்துவமனை உள்ளது. அங்குள்ள பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள கருவிகளை யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து பல் மருத்துவர் கார்த்திகேயன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் வெள்ளி ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..