2 பெண்களிடம் 12 பவுன் செயின் கொள்ளை – கோவையில் துணிகரம்..!

கோவை சவுரிபாளையம் கருணாநிதி நகர், 6 -வது வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி நிர்மலா ( வயது 56 ) இவர் நேற்று தனது ஸ்கூட்டருக்கு பீளமேட்டில் உள்ள ஒரு பங்கில் பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று இருந்த ஒரு ஆசாமி திடீரென்று அவரது கழுத்தில் இருந்த 8 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து நிர்மலா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

இதே போல கோவை தெலுங்கு பாளையம், நாராயணசாமி நகர் 2வது வீதியை சேர்ந்தவர் சந்திரிகா ( வயது 56 )நேற்று இவர் தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள சந்தைக்கு சென்று விட்டு நடந்து வந்தார் அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களில் பின்னால் இருந்து ஆசாமி கீழே இறங்கி வந்து சந்திரிகா கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார். இது குறித்து சந்திரிகா செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.