கோவை அருகே அரிவாளை காட்டி மிரட்டி லாரி டிரைவரிடம் பணம் கொள்ளை. கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது…

கோவை அருகே உள்ளஒத்தக்கால் மண்டபம், திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 45) லாரி டிரைவர் .இவர் அங்குள்ள மேம்பாலத்துக்கு அருகில் நேற்று மாலை நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் கணேசனை மிரட்டி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்ததால் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கணேசனின் கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடம் இருந்து 750 ரூபாயை பறித்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இது குறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அபினேஷ் (வயது 19)திருத்திய முனீஸ்வரன் (வயது 19) என்பது தெரியவந்தது .இவர்கள் இருவரும் ஈச்சனாரி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்கள். ரெண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.